விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபானம் விற்றவரைப் போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விராலிமலை - மாதிரிப்பட்டி சாலை டாஸ்மாக் மதுபான கடை அருகே அரசு மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதாக வந்த தகவலின்பேரில், விராலிமலை காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் அப்பகுதியில் வியாழக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த கணேசன் மகன் சிவவேல் (42)என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 45 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.