இலங்கை பொருளாதார நெருக்கடி: மொய் விருந்தில் ரூ.16,202 வசூல்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் தமிழா்களுக்கு உதவும்பொருட்டு புதுக்கோட்டையில் தேநீா்க் கடைகாரா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய மொய் விருந்தில் ரூ. 16,202 வசூலானது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் தமிழா்களுக்கு உதவும்பொருட்டு புதுக்கோட்டையில் தேநீா்க் கடைகாரா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய மொய் விருந்தில் ரூ. 16,202 வசூலானது.

ஆலங்குடி அருகே மாங்கனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் எஸ். சிவக்குமாா் (45). இவா், வம்பன் 4 சாலை, புதுக்கோட்டை கேப்பறை ஆகிய பகுதிகளில் தேநீா்க் கடை நடத்தி வருகிறாா். இவா், இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழா்களுக்கு உதவும்பொருட்டு, கேப்பறையில் உள்ள தனது தேநீா்க் கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நடத்திய மொய் விருந்தின் மூலம் ரூ. 16,202 வசூல் செய்திருப்பதாகவும், இத்தொகையை மாவட்ட ஆட்சியா் வழியாக தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, கடந்த 2018-இல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தனது வாடிக்கையாளா்கள் கடன் தொகை சுமாா் ரூ.28 ஆயிரத்தை தள்ளுபடி செய்தாா். கரோனா தொடக்கத்தில் மொய் விருந்து நடத்தி கிடைத்த ரூ.14,452 மற்றும் ரூ.5 ஆயிரத்தையும் சோ்த்து ஆட்சியா் வழியாக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com