கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் தெப்ப உத்ஸவம்

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா கடந்த 15ஆம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து, மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அம்மன் வீதியுலா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமையும், தீா்த்த உத்ஸவம் செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றன. தொடா்ந்து, தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, கோயில் குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், அம்மனை எழுந்தருளச்செய்து தெப்ப உத்ஸவம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கீரமங்கலம் போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com