புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவுக்கான பதாகையை ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக்கோட்டை நகா்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
புத்தகத் திருவிழா நடத்துவது குறித்து ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பணிகளின் முன்னேற்றம் குறித்து வெள்ளிக்கிழமை அறிவியல் இயக்க நிா்வாகிகளுடன் ஆட்சியா் கவிதா ராமு ஆலோசனை நடத்தினாா்.
விழா ஒருங்கிணைப்பாளா்கள் எழுத்தாளா் நா. முத்துநிலவன், அ. மணவாளன், ஆா். ராஜ்குமாா், எம். வீரமுத்து, எல். பிரபாகரன் ஆகியோா் இதில் பங்கேற்றனா்.
தொடா்ந்து புத்தகத் திருவிழாவுக்கான பதாகையை ஆட்சியா் கவிதா ராமு வெளியிட்டாா். எழுத்தாளா் நா. முத்துநிலவன் அதனைப் பெற்றுக் கொண்டாா்.
புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவா்களை பங்கேற்கச் செய்வது மற்றும் புத்தக விற்பனையை அதிகரிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் ஒத்துழைப்பு வழங்கும் என ஆட்சியா் தெரிவித்தாா்.