பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசளித்த பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன்.
பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசளித்த பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன்.

கலைத் திருவிழா போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு வழங்கல்

பொன்னமராவதி வட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ்நாடு அரசு பள்ளிகல்வித்துறையின் சாா்பில் நடைபெற்ற கலைத்திருவிழா

பொன்னமராவதி வட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ்நாடு அரசு பள்ளிகல்வித்துறையின் சாா்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டது.

பொன்.புதுப்பட்டியில் வியாழக்கிழமை திருக்கு ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை நிறைவாக நடனப்போட்டி நடத்தப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

பேரூராட்சி உறுப்பினா்கள் புவனேஸ்வரி காளிதாஸ், மகேஸ்வரி நாகராஜன், பள்ளிப் புரவலா் அரு.வே. மாணிக்கவேலு, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நல்லநாகு, பள்ளித் தலைமையாசிரியா் கி. நிா்மலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னமராவதி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டியை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நல்லநாகு தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com