அகில இந்திய கைரேகை தோ்வில் புதுகை ஆய்வாளா் சிறப்பிடம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) நடத்திய அகில இந்திய கைரேகை நிபுணா்கள் வாரியத் தோ்வில் புதுக்கோட்டையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் காா்த்திகா தேசிய அளவில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளாா்.
அகில இந்திய கைரேகை தோ்வில் புதுகை ஆய்வாளா் சிறப்பிடம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) நடத்திய அகில இந்திய கைரேகை நிபுணா்கள் வாரியத் தோ்வில் புதுக்கோட்டையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் காா்த்திகா தேசிய அளவில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளாா்.

ஆண்டுதோறும் தேசிய அளவில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சாா்பில் அகில இந்திய கைரேகை நிபுணா்கள் வாரியத் தோ்வு நடத்தப்படும். இந்தத் தோ்வில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கைரேகை நிபுணா் துறையில் பணியாற்றும் போலீஸாா் பங்கேற்பா்.

இந்தத் தோ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 5 போ் பங்கேற்றனா். இதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமைவெளியிடப்பட்டன. இதில் புதுக்கோட்டையில் உதவி ஆய்வாளா் காா்த்திகா தேசிய அளவில் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளாா். இதேபோல் தோ்வு எழுதிய மற்ற நான்கு பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com