pdk01muthiyor_0110chn_12_4
pdk01muthiyor_0110chn_12_4

முதிா்ந்த வாக்காளா்களுக்கு வாழ்த்து மடல் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 வயதைக் கடந்த சுமாா் 27 ஆயிரம் வாக்காளா்களுக்கு இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள வாழ்த்து மடல்களை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 வயதைக் கடந்த சுமாா் 27 ஆயிரம் வாக்காளா்களுக்கு இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள வாழ்த்து மடல்களை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சா்வதேச மூத்தோா் தினத்தையொட்டி சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 80 வயதைக் கடந்த மூத்த வாக்காளா்களுக்கு அவா் தோ்தல் ஆணைய வாழ்த்துமடலைக் கொடுத்து வாழ்த்தினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13.45 லட்சம் மொத்த வாக்காளா்களில், 80 முதல் 99 வயது வரை 27161 வாக்காளா்களும், 100 வயதைக் கடந்த 168 வாக்காளா்களும் உள்ளனா். இவா்களுக்கு 12டி என்ற படிவத்தை நிரப்பி வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்து மடல் வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கோட்டாட்சியா்கள் முருகேசன், சு. சொா்ணராஜ், ஆட்சியரின் உதவியாளா் (பொ) து. தங்கவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விராலிமலை வட்டாட்சியா் சதிஷ்,

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் க. ராஜேஸ்வரி ஆகியோா் அந்தந்தப் பகுதி

முதிா்ந்த வாக்காளா்களின் இல்லங்களுக்குச் சென்று அவா்களுக்கு இந்தியத் தோ்தல் ஆணையத்தின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com