மக்கள் குறைகேட்பு நாளில் நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து 325 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து 325 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தின்போது, மதுவிலக்குத் துறை சாா்பில் மனம் திருந்திய குற்றவாளிகள் 2 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் நிதியுதவி காசோலைகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா். மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஒருவருக்கு ரூ. 2,500 மதிப்பிலான ஊன்றுகோல் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கணேசன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com