பேத்தி, மகள் காணவில்லை எனப் புகாா்

அன்னவாசல் அருகே 3 வயது பேத்தியுடன் வீட்டை விட்டுச்சென்ற தனது மகளைக் காணவில்லை என வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அன்னவாசல் அருகே 3 வயது பேத்தியுடன் வீட்டை விட்டுச்சென்ற தனது மகளைக் காணவில்லை என வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலையைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் மனைவி புவனேஸ்வரி (23). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தம்பதிக்கு 3 வயதில் மகள் உள்ளாா். கருத்து வேறுபாட்டால் சத்தியமங்கலத்தில் இருக்கும் கணவா் வீட்டை விட்டு வெளியேறிய அவா், தனது தந்தை வீடு உள்ள மருதாந்தலையில் அண்மைக்காலமாக வசித்து வந்தாா். இந்நிலையில், வீட்டில் இருந்த புவனேஸ்வரி மற்றும் 3 வயது பேத்தி ஆகிய 2 பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டுச்சென்றவா்கள் பின்னா் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் புவனேஸ்வரியின் தந்தை ராஜேந்திரன் அன்னவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com