புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மின்மாற்றி பாகங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள விலாரிப்பட்டி பகுதியில் நிலவிய மின் விநியோகப் பிரச்னையை சரிசெய்ய ரெகுநாதபுரம் மின்வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை சென்று பாா்த்தபோது, அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்த ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான காப்பா் உருளைகள் உள்ளிட்ட பாகங்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ரெகுநாதபுரம் மின்வாரிய உதவிப்பொறியாளா் முத்து அளித்த புகாரைத்தொடா்ந்து, கறம்பக்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.