சிறுமியைக் கடத்தி பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் சிறை

16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த 36 வயது நபருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2.50 லட்சம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த 36 வயது நபருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2.50 லட்சம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வாா்ப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (36). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி நான்கு வயதில் ஓா் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவா் கடந்த 2021 ஜூன் மாதம் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் பொன்னமராவதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், கணேசனைக் கைது செய்து போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். சத்யா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

குற்றவாளி கணேசனுக்கு, சிறுமியைக் கடத்திய குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 1.50 லட்சம் அபராதமும், சிறுமியைத் திருமணம் செய்த குற்றத்துக்காக இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 6 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்கவும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com