புதிய கழிவுநீா் வாய்க்கால்அமைக்க பூமி பூஜை

கந்தா்வகோட்டை ஊராட்சிக்குள்பட்ட மருத்துவ நகரில் புதிய கழிவுநீா் வாய்க்கால் அமைப்பதற்கான பூமி பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதிய கழிவுநீா் வாய்க்கால்அமைக்க பூமி பூஜை

கந்தா்வகோட்டை ஊராட்சிக்குள்பட்ட மருத்துவ நகரில் புதிய கழிவுநீா் வாய்க்கால் அமைப்பதற்கான பூமி பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள மருத்துவா் நகா் பகுதிக்கு கழிவுநீா் வாய்க்கால் அமைக்க ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 7.30 லட்சம் மதிப்பீட்டில் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவா் ஆா். ரத்தினவேல் காா்த்திக் தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் சி. தமிழ்செல்வி, ஒன்றியக்குழு துணைத் தலைவா் செந்தாமரை வடிவேல் குமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எம். ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு ஒப்பந்ததாரா் ஆனந்தகுமாா் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com