முத்தகவுண்டம்பட்டியில் புதிய பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு

விராலிமலை அருகேயுள்ள முத்தகவுண்டம்பட்டியில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை கூட்டுறவுத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.
முத்தகவுண்டம்பட்டியில் புதிய பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு

விராலிமலை அருகேயுள்ள முத்தகவுண்டம்பட்டியில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை கூட்டுறவுத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.

விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் கீழ் ராஜாளிப்பட்டியில் புதிய நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. ராஜாளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்தகவுண்டம்பட்டி பொதுமக்கள் நீண்ட தொலைவு வந்து ரேசன் பொருட்கள் வாங்கிச் செல்லும் நிலை உள்ளதாகக் கூறி பொது விநியோகத் திட்ட அதிகாரிகளிடம் முத்தகவுண்டம்பட்டி கிராமத்தில் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையைத் திறக்கக்கோரி மனு அளித்திருந்தனா். அதன்பேரில், முத்தகவுண்டம்பட்டியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை பொது விநியோக திட்ட அமலாக்கப் பிரிவு மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா்கள் மற்றும் ராஜாளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சின்னச்சாமி, கவுன்சிலா் முத்துலெட்சுமி காளமேகம் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com