புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி, வகுப்புகளைப் புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள மருதன்கோன்விடுதியில் உள்ள அரசுக் கலைக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுளுக்கு பேராசிரியா்கள் இல்லையாம். காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி, உரிய அலுவலா்களிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், கல்லூரியில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்தோஷ்குமாா் தலைமையில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி வருவாய்த் துறையினா், காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத்தொடா்ந்து, போராட்டத்தை மாணவா்கள் கைவிட்டனா்.