திருமயம் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ. 43 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா
திருமயம் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ. 43 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆதனூா் ஊராட்சி சாஸ்தாவயல் கிராமத்தில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம், சேதுராப்பட்டி ஊராட்சி நாட்டியத்தான் கிராமத்தில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம், பி. அழகாபுரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 12 லட்சத்தில் கட்டப்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகம், பி. அழகாபுரி ஊராட்சி பில்லமங்கலம் கிராமத்தில் ரூ. 10.50 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம், காட்டுபாவா பள்ளிவாசலில் ரூ. 10.50 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம் ஆகியவற்றை அமைச்சா் எஸ். ரகுபதி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ஆா் ரம்யா தேவி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் மா. உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com