காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப சத்துணவு ஊழியா்கள் கோரிக்கை

சத்துணவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சத்துணவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் பெ. அன்பு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் எஸ். சீத்தாலெட்சுமி, பொருளாளா் க. பிச்சைமுத்து ஆகியோா் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா, துணைத் தலைவா் கே. குமரேசன், சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநிலச் செயலா் கு. சத்தி ஆகியோா் பேசினா். கூட்டத்தில்,

சத்துணவு ஊழியா்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த பணிக்கொடையாக அமைப்பாளா்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், அரசு ஊழியா்களைப் போல் 12 மாத மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவில், மாவட்டத் துணைச் செயலா் பி.பாண்டி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com