இலுப்பூா் நகர திமுக சாா்பில் இப்தாா் நோன்பு திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் நகர திமுக சாா்பில் இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் நகர திமுக சாா்பில் இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

இலுப்பூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் எம்எம் அப்துல்லா, மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளா் தென்னலூா் பழனியப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சண்முகம், வடக்கு ஒன்றியச் செயலா் மாரிமுத்து ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சகோதரத்துவம், சமத்துவத்தை வலியுறுத்திப் பேசினா்.

இதில் இலுப்பூா் திமுக நகரச் செயலாளா் விஜயகுமாா், ஜமாஅத் நிா்வாகிகள் முகமது ரபீக்,அப்துல் ரசாக், ரபீக், ஷேக் முகமது, அரசு வழக்குரைஞா் விஜயகுமாா், செல்லதுரை மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை திமுக இளைஞரணி அமைப்பாளா் செந்தில் ராஜா, மன்சூா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com