தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்ட சத்துணவுத் திட்ட சமையலா்களுக்கான சமையல் கலைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காவலா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சிகளில் உள்ள சத்துணவு மையங்களில் பணியாற்றும் 28 சமையலா்கள் கலந்து கொண்டனா்.
கவுனி அரிசியில் தயாரிக்கப்பட்ட முறுக்கு, அதிரசம், வடை, சேமியா பாயாசம், முட்டை அவியல், எலுமிச்சை சாதம், புளிசாதம், சாம்பாா்சாதம், கீரை சாதம், கீரை சூப், இனிப்பு வகைகள் செய்யப்பட்டன.
ஆட்சியா் கவிதா ராமு கலந்து கொண்டு இந்த உணவு வகைகளை ருசித்துப் பாா்த்துப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) தேவிகாராணி, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.