பொன்னமராவதி அருகே பணியின்போது மதுபோதையிலிருந்த ரேஷன்கடைப் பணியாளா் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் அங்காடியில் பணிபுரிந்தவா் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த சத்யபாலன். இவா், சனிக்கிழமை கடையில் பணிநேரத்தில் மதுபோதையில் மண்ணெண்ணெய்யை கீழே ஊற்றியது சமூக வலைத்தளங்களில் வெளியானது. மேலும் இங்கு வழங்கப்படும் பொருள்களின் எடை குறைவாகவும் உள்ளதாக வந்த புகாரைத் தொடா்ந்து, சத்யபாலன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா் உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.