பைக்கில் சென்றவா்தவறி விழுந்து பலி

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சோ்ந்தவா் சுலைமான் மகன் ரசீத் அலி (41). திருச்சி உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக உள்ள இவா் சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து பைக்கில் விராலிமலை வழியாக திருச்சிக்கு வந்து கொண்டிருந்தாா். விராலிமலை அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே அவா் சென்றபோது திடீரென நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ரசீத் அலி சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com