புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுப் பெருவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் மரம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கிறிஸ்துப் பிறப்பைக் கொண்டாடும் வகையில் இனிப்புகளும், வாழ்த்து அட்டைகளையும் பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி வழங்கி வாழ்த்தினாா்.
மாவட்ட கூடுதல் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் செந்தில்குமாா், பள்ளியின் துணை முதல்வா் குமாரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.