பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் தொழிலாளா் நலத்துறையின் சாா்பில், தேசிய அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, கண்டியாநத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி முருகேசன் தலைமை வகித்தாா். முகாமில், தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள் முன்னிலையில் பொதுமக்களிடம் ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண் மற்றும் கைப்பேசி எண் ஆகியவைகளை தொழிலாளா் நல அலுவலா் பிரபாகா் பெற்று பதிவு செய்தாா். முகாமில், கண்டியாநத்தம், கேசராபட்டி, புதுப்பட்டி கிராமத் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.