புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 10.47% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளுக்கான 187 வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.
278 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2.40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான வாக்குப்பதிவில் 10.47% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பல வார்டுகளில் காலையிலேயே பெண்களூம் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவுக்கான ஏற்படுகளை மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கவிதா ராமு தலைமையிலான அதிகாரிகள் செய்துள்ளனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.