புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 410 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தின்போது, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 6 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 43500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி வழங்கினாா். கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் பிரேம்குமாா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.