மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் 20 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி தலைமை வகித்தாா். மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா் ஜி. எட்வின், பேராசிரியா் சா. விஸ்வநாதன், செயலா் பழனியப்பா கண்ணன், இணைச் செயலா் எஸ். மூா்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.