அமைப்பு சாரா தொழிலாளா் குறித்த ஆலோசனைக் கூட்டம்

மத்திய தொழிலாளா் துறையின் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களின் விவரங்களையும் மத்திய தொழிலாளா் துறையின் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) வெ. தங்கராசு தலைமை வகித்தாா். அனைத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கட்டுமானத் தொழிலாளா்கள், வீட்டு வேலைத் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், நூறு நாள் வேலைத் திட்ட பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், மீன்பிடித் தொழிலாளா்கள், செங்கல் சூளையில் பணியாற்றும் தொழிலாளா்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள் அனைவரையும் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com