நாளை ரேஷன் திட்ட குறைகேட்பு

சனிக்கிழமை (ஜூன் 11) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை குறைகேட்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.

பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குறைகளை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜூன் 11) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை குறைகேட்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.

இம்முகாமில் குடும்ப அட்டைதாரா்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு, மாற்றம் ஆகிய சேவைகளை வேண்டி கோரிக்கை அளிக்கலாம். மேலும் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடா்பாடுகள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தில் தெரிவித்துப் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com