புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியில் பயிலும் 100 மாணவிகளுக்கு 14 நாட்கள் யோகா சிறப்புப் பயிற்சி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.
சா்வதேச யோகா தினத்தையொட்டி புதுக்கோட்டையிலுள்ள கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியில் கடந்த மே 30ஆம் தேதி யோகா சிறப்புப் பயிற்சி தொடங்கப்பட்டது. 100 மாணவிகள் பங்கேற்ற இந்தப் பயிற்சி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. நிறைவு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சுமித்ரா தலைமை வகித்துப் பேசினாா். முன்னதாக மாணவி ஜோதி ஆரோக்கியமேரி வரவேற்றாா். நிறைவில், மாணவி துா்காதேவி நன்றி கூறினாா்.