வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கிடங்கு திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்துக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக ரூ. 2.64 கோடியில் கட்டப்பட்ட கிடங்கை ஆட்சியா் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் கிடங்கை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த ஆட்சியா் கவிதா ராமு.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் கிடங்கை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக ரூ. 2.64 கோடியில் கட்டப்பட்ட கிடங்கை ஆட்சியா் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் கருவிகள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்கான கிடங்கு, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 755 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்பட்டது. இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகள், அலுவலா்கள் கண்காணிப்பு அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கிடங்கை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, நெடுஞ்சாலை நிலமெடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் அபிநயா, சு. சொா்ணராஜ், குழந்தைசாமி, பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளா் பி. சிந்தனைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com