கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் மரவள்ளிக் கிழங்கு அறுவடை தொடங்கியுள்ளது.
இதுதொடா்பாக அப்பகுதி விவசாயிகள் மேலும் கூறியது:
தற்சமயம் பெய்த மழையின் காரணமாக கிழங்குகளைப் பறிப்பது தொழிலாளா்களுக்கு சுலபமாக இருக்கிறது. மேலும் விவசாயிகளுக்கு கிழங்கு சேதாரம் இல்லாமல் முழுவதுமாகக் கிடைக்கிறது. கிழங்கு கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள் சேலத்தில் இருந்து இப்பகுதியில் முகாமிட்டு கொள்முதல் செய்யக் காத்திருக்கின்றனா். மரவள்ளிக் கிழங்குகள் ஜவ்வரிசி ஆலைகளுக்கு ஏற்ற ரகமாக உள்ளது. இந்தப் பட்டத்தில் பயிா் செய்த மரவள்ளிக் கிழங்கு நல்ல மகசூல் தந்துள்ளதாகத் தெரிவித்தனா். குறைந்த நீா் போதுமானது, உரம் மற்றும் வேலையாட்களும் குறைவு என்பதால் இப்பகுதி விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கைப் பயிரிடுவதில் ஆா்வம் காட்டுகின்றனா் என்றனா்.