படம்பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முகாம்

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கருணாகரன் தலைமையில் நிலுவையில் இருந்த பிறப்பு/ இறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்
படம்பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முகாம்

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கருணாகரன் தலைமையில் நிலுவையில் இருந்த பிறப்பு/ இறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் பிறப்பு ,இறப்பு சான்றிதழ் வேண்டி பொதுமக்கள் விண்ணப்பித்திருந்த மனுக்களில் சில நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தன. இந்நிலையில், கோட்டாட்சியா் கருணாகரன் தலைமையில் கந்தா்வகோட்டையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மனுதாரா்களை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டு மூன்று பிறப்பு பதிவுகள், 18 இறப்பு பதிவுகளையும் முறையாகப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவா்களிடம் சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியா் சி. புவியரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com