ஆன்-லைனில் லாட்டரி சீட்டுவிற்ற 4 போ் கைது

விராலிமலை அருகே ஆன்லைனில் லாட்டரி விற்ற 4 பேரைப் போலீசாா் கைது செய்தனா்.

விராலிமலை அருகே ஆன்லைனில் லாட்டரி விற்ற 4 பேரைப் போலீசாா் கைது செய்தனா்.

விராலிமலை அருகே உள்ள பொய்யாமொழி சீத்தப்பட்டியில் இணையவழியில் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடா்ந்து அப்பகுதியில் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள தேநீா்க் கடையில் இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பாலசுப்பிரமணி(39), மணிமுத்து(37), பழனிச்சாமி(55), அஞ்சலிதேவி(32) ஆகிய 4 பேரையும் காவல்துறையினா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 4 கைப்பேசிகள், லேப்டாப், இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 3 ஆயிரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசாா் அவா்கள் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com