விராலிமலை பட்டமரத்தான் கோயில் திருவிழாவையொட்டி சம்பிரதாய ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
விராலிமலை - கீரனூா் சாலையில் உள்ள பட்டமரத்தான் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். நிகழாண்டின் சம்பிரதாய ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் காளைகளுடன் சோ்ந்து அப்பகுதியில் காளை வளா்ப்போா் பட்டமரத்தான் கோயில் நோ்த்திக் கடனை நிறைவேற்றும் நோக்கில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட காளைகளை கோயில் முன்பு அவிழ்த்து விட்டனா். முன்னதாக கோயில் காளைகளை விராலிமலை முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக அழைத்து வந்தனா்.