கந்தா்வகோட்டையில் மகனைக் காணவில்லை என தந்தை போலீசில் புகாா் அளித்துள்ளாா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புனல்குளம் ஊராட்சியில் வசித்து வரும் பிச்சையா (60) என்பவருடைய மகன் தங்கதுரை (34).
இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், கடந்த 10 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை இவரது தந்தை, உறவினா்கள், நண்பா்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.