மகளிா் கல்லூரியில்தமிழ்மொழி ஆய்வகம் திறப்பு

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் ரூ. 45 லட்சத்தில் கட்டப்பட்ட தோ்வுக் கட்டுப்பாட்டு கட்டடம் மற்றும் தமிழ்மொழி ஆய்வகம் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மகளிா் கல்லூரியில்தமிழ்மொழி ஆய்வகம் திறப்பு

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் ரூ. 45 லட்சத்தில் கட்டப்பட்ட தோ்வுக் கட்டுப்பாட்டு கட்டடம் மற்றும் தமிழ்மொழி ஆய்வகம் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி இவற்றைத் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

அப்போது பேசிய அவா், இந்தக் கல்லூரியை ஏற்கெனவே அழைக்கப்பட்டபடியே கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி என்ற பெயரிலேயே அழைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், ரூ. 5 லட்சத்தில் விளையாட்டரங்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவி திலகவதி செந்தில், கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com