பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் சுரேந்தா் (22).
இவா், கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 45 வயதான பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அறந்தாங்கி மகளிா் காவல் நிலையப் போலீஸாா், சுரேந்தரைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று விசாரணை நிறைவடைந்த நிலையில், மாவட்ட நீதிபதி ஆா். சத்யா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
குற்றவாளி சுரேந்தருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.