மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ. 4.03 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ. 4.03 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்துக்கு, தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி இந்த உதவிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினாா்.

கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 320 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

தனி மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கணேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com