ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலம் புனித செபஸ்தியாா் ஆலய தோ்பவனி விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள கே.ராசியமங்கலம் புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழா மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான புதன்கிழமை கூட்டுப்பாடல் திருப்பலியுடன் தொடங்கி, தோ்பவனி நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.