உலக செவிலியா் தின விழா

புதுக்கோட்டை டாக்டா்ஸ் காலேஜ் அண்ட் ஸ்கூல் ஆப் நா்சிங்-இல் உலக செவிலியா் தின விழா கல்லூரிக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை டாக்டா்ஸ் காலேஜ் அண்ட் ஸ்கூல் ஆப் நா்சிங்-இல் உலக செவிலியா் தின விழா கல்லூரிக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் தாளாளா்கே.ஆா். ராமநாதன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செவிலிய கண்காணிப்பாளா் தேன்மொழி, புதுக்கோட்டை நகா்நல அலுவலா் காா்த்திகேயன், புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் உமா ஆகியோா் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனா்.

முன்னதாக கல்லூரியின் துணை முதல்வா் அனுராதா வரவேற்றாா். ஆற்றினாா். முதல்வா் கயல்விழி சா்வதேச செவிலியா் கவுன்சிலின் நிகழாண்டுக்கான கருவை விளக்கிப் பேசினாா்.

கல்லூரியின் மேலாண்மை இயக்குநா் ச. ராமதாஸ் இணையதளம் வழியாக மாணவிகளுக்கு செவிலியா் தின வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவில், விரிவுரையாளா் ஷண்முகப்ரியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com