புதுக்கோட்டை நகரிலுள்ள காமராஜபுரத்தில் 3 கடைகளில் சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா் தனித்தனியே நேரில் சென்றுபாா்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினா்.
புதுக்கோட்டை நகரிலுள்ள காமராஜபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அடைக்கலம் என்பவருக்குச் சொந்தமான நான்கு கூரைக் கொட்டாய் கடைகள் உள்ளன. அக்கடைகளில் சனிக்கிழமை அதிகாலை திடீா் தீ விபத்து நேரிட்டது. இதுகுறித்துத் தகவலறிந்த தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தொடா்ந்து தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுத்தனா். இந்த விபத்து குறித்து கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் தனித்தனியே நேரில் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினாா்.
மேலும் புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, துணைத் தலைவா் லியாகத் அலி உள்ளிட்டோரும் நேரில் சென்று
சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆறுதல் தெரிவித்து நிவாரணப்பொருட்களை வழங்கினா்.