விராலிமலை அருகேயுள்ள விருதாப்பட்டி, பொருவாய் ஆகிய ஊா்களின் பெரிய குளத்தில் திங்கள்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஊா்ப் பொதுமக்கள் அதிகாலை முதலே குளத்தின் கரையில் திரண்டனா். இதையடுத்து, காலை ஊா் முக்கியஸ்தா் வெள்ளைத் துண்டு வீசியதைத் தொடா்ந்து கரையில் காத்திருந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மீன்பிடி சாதனங்களான வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட உபகரணங்களுடன் குளத்திற்குள் இறங்கி மீன்களைப் பிடித்தனா். இதில் விரால், கட்லா, கெண்டை உள்ளிட்ட வகை மீன்கள் சிக்கின.