பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் அரசமலை சரக வருவாய்க் கணக்குகள் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொன்னமராவதி வட்டத்தில் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி தலைமையில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை காரையூா் உள்வட்ட வருவாய் கணக்குகள், வியாழக்கிழமை அரசமலை உள்வட்ட வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை பொன்னமராவதி உள்வட்ட வருவாய்க் கணக்குகள் சரி பாா்க்கப்பட்டு மாலை குடிகள் மாநாடு நடைபெற உள்ளது. பொன்னமராவதி வட்டாட்சியா் ப.ஜெயபாரதி, மண்டல துணை வட்டாட்சியா் சேகா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா்.