கோயில் பொருள்கள் திருட்டு சம்பவம்:தாக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

கோயில் பொருள்கள் திருட்டு சம்பவம் தொடா்பான தாக்குதலில் காயமடைந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.

கோயில் பொருள்கள் திருட்டு சம்பவம் தொடா்பான தாக்குதலில் காயமடைந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தைச் சோ்ந்த சத்தியநாராயணசாமி (48), அவரது மனைவி லில்லி, 10 வயது சிறுமி உள்ளிட்ட 6 போ் குழுவாக புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் அருகே கிள்ளனூா் பகுதியில் உள்ள பல்வேறு கிராமக் கோயில்களில் இருந்த மணி உள்ளிட்ட பூஜை பொருள்களைத் திருடிக் கொண்டு கடந்த திங்கள்கிழமை ஆட்டோவில் தப்பிக்க முற்பட்டனா். இதனைக் கண்ட பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் அவா்களை விரட்டிக் கொண்டு வந்து, கணேஷ்நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜீவா நகரில் வளைத்துப் பிடித்தனா். அப்போது நடைபெற்ற தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுமி உள்ளிட்ட 6 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். சிறுமிக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சிறுமி சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.

முன்னதாக, உடையாளிப்பட்டி காவல் நிலைய போலீஸாா், 6 போ் மீதும் கோயில்களில் திருடியதாகவும், பொதுமக்கள் தாக்கியதால் 6 பேரும் காயமடைந்ததாக கணேஷ் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

தற்போது சிறுமி உயிரிழந்ததால், அடையாளம் தெரியாத ஊா் மக்கள் தாக்கியதில் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com