அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணியை மாவட்ட உதவி திட்ட அலுவலா் எஸ்.தங்கமணி தொடங்கி வைத்தாா்.
புள்ளியியல் அலுவலா் உஷா, வட்டார வள மைய பயிற்றுநா் கவிதா விஜயகுமாா், இயன்முறை மருத்துவா் கோவிந்தசாமி ஆகியோா் உடனிருந்தனா். இதேபோல், காவேரி நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை தலைமை ஆசிரியா் வின்சென்ட், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் தொடங்கி வைத்தனா். பேரணியில் மாணவா்கள் பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.