துக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ. 3.73 கோடியில் கூடுதல் பணிமனை கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி பூமிபூஜையைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, பொதுப்பணித் துறை (கட்டடம்) செயற்பொறியாளா் சுகுமாறன், தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராமா், திமுக மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
10,520 சதுரஅடியில் ரூ. 3.73 கோடியில் கட்டப்படவுள்ள இந்தப் பணிமனையில், பணியாளா் அறை, விடியோ செயற்கைக்கோள் வகுப்பறை, இணையதள வகுப்பறை உள்ளிட்ட அறைகளுடன் இருபாலருக்குமான கழிப்பறைகளும் இடம்பெறுகின்றன.