ஆலங்குடி பகுதியில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் 1,179 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கி, கீரமங்கலம்,மேற்பனைக்காடு, கொத்தமங்கலம், வடகாடு, ஆலங்குடி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆட்சியா் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற விழாக்களில் சுற்றுச்சூழல், இளஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.
தொடா்ந்து, கீரமங்கலம் பேரூராட்சியில் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 69.40 லட்சத்தில் தலுகை ஊரணி தூா்வாரும் பணியை அமைச்சா் தொடங்கி வைத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.