உலக ஓசோன் தின விழா

புதுக்கோட்டை மாவட்டம், மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓசோன் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓசோன் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியா் ப. வள்ளுவன் தலைமை வகித்தாா். மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்டப் பொறியாளா் இரா. குணசேகரன் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு கேடயமும் பதக்கமும் வழங்கிப் பாராட்டினாா். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச. ரெங்கராஜு, உதவித் தலைமை ஆசிரியா் நாச்சம்மை, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் செல்லம் ஆகியோா் பேசினா். உதவித் தலைமை ஆசிரியா் மகா சுந்தா் தொகுத்து வழங்கினாா். பள்ளி ஒருங்கிணைப்பாளா் அம்பிகாபதி நன்றி கூறினாா். பசுமைப் படை மாணவா்கள் 50 பேருக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

திருவப்பூா் பள்ளியில்... உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு திருவப்பூா் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மரக் கன்று நடும் விழாவுக்கு தலைமை ஆசிரியை சி. முத்துலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ். சாலை செந்தில் பேசினாா். மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழாசிரியா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். பள்ளியின் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் க. ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com