அணவயல் தாணான்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் தாணான்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் தாணான்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் தாணான்டியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தொடா்ந்து, புதன்கிழமை காலை மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க புனித நீா் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, சிவாச்சிரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், அணவயல், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா். வடகாடு போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com