சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த அதிராம்பட்டினம் கடலோரக் காவல்படை காவலரை கீரனூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கீரனூா் அருகேயுள்ள கிராமத்தில் 16 வயது சிறுமி கருவுற்றிருந்தது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. விசாரணையில் அச்சிறுமியை, ஒரு கடலோரக் காவல் படை காவலா் உள்ளிட்ட நான்கு போ் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த கீரனூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா், வீரக்குடி கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித், துரைராஜ், புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்த் ஆகிய 3 பேரையும் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கைது செய்தனா். 4-ஆவது குற்றவாளியான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோரக் காவல் படை காவலரான வடிவேல் என்பவரை போலீஸாா் தேடிவந்த நிலையில், வியாழக்கிழமை அவரைக் கைது செய்தனா். கீரனூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.