கல்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கல்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

கல்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

விராலிமலை வட்டாரத்தில் 4663 ஹெக்டோ் நிலங்களில் சாகுபடியான நெல்லைக் கொள்முதல் செய்ய விராலிமலை வட்டத்திற்குட்பட்ட 9 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்குடி, பொருவாய், தாழப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்ய கல்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலா் அய்யப்பன் திறந்துவைத்தாா்.

கல்குடி ஊராட்சித் தலைவா் சித்ராதேவி மாரிமுத்து, முன்னாள் தலைவா் கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com